5.25.2013

நன்றி மறப்பது நன்றன்று...

நன்றி மறப்பது நன்றன்று...


வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.

சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!


சிதம்பர இரகசியம் என்றால் என்ன ...!


சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.


ஒரு பெண்ணின் டைரிகளிலிருந்து...



10 வயதில் : நானும் அவனும் வீட்டுப்பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அவன் வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுப் பேனா வாங்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வுதான் காதல் என்பதோ? ஒரு நிமிடம் பரவசத்தில் உடல் சிலிர்க்க, அதை மறைத்துக்கொள்ளப் பெரும் பிரயத்தனப்பட்டேன். அப்போது என் கண்களில் நான் உணர்ந்த்துதான் ஒருவேளை சந்தோஷக் கண்ணீராக இருக்குமோ?

15 வயதில் : நானும் அவனும் தனியாக இருந்த ஒரு சமயத்தில் கொஞ்சம் எல்லை மீறிப் பிடிபட்டுக்கொண்டோம். சற்றும் தயங்காமல் அவன் பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டு மரண அடி விழுந்தபோதும் மற்றவர்களின் முன்னால் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் ரத்தம் பார்த்து என் விழிகளில் கண்ணீர் ரத்தமாக வழிந்தது

 18 வயதில் : பள்ளிப் பிரிவுபச்சார விழா முடிந்ததும் மனம் முழுதும் இறுக்கமும் தவிப்புமாக நான் அவனிடம் குட்பை சொல்ல முயற்சித்தபோது அவன் என்னை இறுக அணைத்து ‘என்னை மறந்து விடுவாயா?’ என்று கலங்கிய கண்களுடன் கேட்டான். என் கண்கள் ஏற்கனவே கண்ணீர் சாகரத்தில் நனைந்திருந்தன

 21 வயதில் : நானும் அவனும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு நீண்ட பயணத்துடன் கூடிய டேட்டிங் செய்தோம். எத்தனையோ வாய்ப்புக்கள் இருந்தும், ஏன் நானே ஒருவகையில் தயாராக இருந்தும் எண்ணற்ற முறை என்னை முத்தமிட்டிருந்த அவன் அன்று ஏனோ என்னைத் தொடக்கூட இல்லை. சாதகமான சூழ் நிலையில் கூடச் சுயக் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ளும் அவனைப் புரிந்து கொண்ட என் கண்கள் பெருமிதத்தில் வெளியிட்ட கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டேன்.

 26 வயதில் : அந்த நாள் வந்தே விட்டது. கையில் சிவப்பு ரோஜாவுடன் முழந்தாளிட்டு அவன் என்னை ப்ரபோஸ் செய்தான். அவனை அவனே முட்டாளாக்கிக் கொண்டதைப்போல அப்படியொரு அறியாமையான வேண்டுதல். அப்போது சொன்னான்: “நான் உன்னை விரும்புகிறேனென்று நீயும் அறிந்திருப்பாய்”. உன்னதப் புன்னகை புத்த என் இதழ்களின் சிருங்காரத்தை உணரவில்லை அப்போதும் கண்களில் வழிந்த அதே சந்தோஷக் கண்ணீர்.

 35 வயதில் : நான் களைப்பாக இருப்பதைப் பார்த்தால் எனக்குக் காஃபி போட்டுக்கொடுத்துத் தூங்க வைத்துவிட்டு அவர் வீட்டுவேலைகளை முழுமையாகச் செய்து முடிப்பார். கடைசியில் அவர் என்னருகில் படுத்துக்கொள்ளும்போது நான் விழித்திருப்பதை அறியாமல் நெற்றியில் முத்தமிட்டுக் ‘குட் நைட்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். என் மூடிய விழிகளுக்குள் நன்றியின் கண்ணீர் தளும்பும்.

50 வயதில் : சிக்கலான சமயங்களில் அவர் ஆஃபீஸ் கவலையில் அல்லது உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும் என்னைச் சிரிக்க வைப்பதற்காக ஜோக்கடித்து என் சிரிப்பை ரசிப்பார். ஆனால்,பாவம் அப்போதும் என் ஆனந்தக் கண்ணீரை அவர் உணர முடியாமல் துடைத்துக் கொள்வேன். அவரும் சிரித்துக்கொண்டிருப்பார்.

 60 வயதில் : தனது கடைசி மூச்சின் சுவாசத்தின்போது அவர் சொன்னார் : “... எனக்கு எல்லையில்லாத காதலைக் கொடுத்தாய். என் ஆண்மையைப் பெருமிதத்துடன் வாழ் நாள் முழுக்க உணரச் செய்தாய். ஒரு காதலின் பின்னால் எனக்கு இவ்வளவு உன்னதமான வாழ்வு கிடைக்குமென்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. நன்றி...

 என் கைகளைப் பற்றியிருந்த அவரின் கரங்கள் இறுதியாகத் துவண்டுவிட்டன. என் விழிகளில் நிரந்தரக் கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்துவிட்டு எப்போதும் எங்கேயும் என்னைக் கூடவே அழைத்துச்செல்லும் அவர் இப்போது முதல்முறையாக என்னை விட்டுவிட்டுச் சென்றார். இந்தமுறை நான் கண்ணீரைத் துடைக்கவில்லை...!

1. பாசத்தைக் காட்டுகிறேன் என்கிற பெயரில், ஆரம்பம் முதலே மிகையாகக் கொஞ்சுவது, தாங்குவது என செய்வது தவறு. அவர்கள் கேட்பதற்கு முன்னரே ஒரு பொருளைக் கைகளில் தருவதும் தேவையில்லாதது. அழுவதற்கு முன்னரே பால் கொடுப்பதிலேயே துவங்குகிறது இந்தப் பிரச்னை. கேட்பதற்கு முன்னரே எல்லாம் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தைகள், வளர வளர அடம் பழகவே செய்யும்.

2. உங்கள் குழந்தைகள் கேட்கும் விஷயம் நியாயமானதாகவும், உங்களால் நிறைவேற்ற முடிவதாகவும் இருந்தால்... அது அடம் அல்ல, தேவை. அவற்றைத் தாராளமாக நிறைவேற்றலாம்.

3. குழந்தை ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டு, அது தேவையில்லாதது அல்லது அதற்கான சூழ்நிலை இது இல்லை என்பதை எடுத்துச் சொல்லியும் தொடர்ந்து அடம் செய்தால், கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள். உதாரணமாக, கடையில் ஒரு பொம்மையைக் கேட்டு அழுது அடம் செய்தால், அன்பாகச் சொல்லிப் பாருங்கள். அடம் தொடர்ந்தால், குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு நடையைக் கட்டுங்கள். நீங்கள் வாசலுக்குச் செல்லும்போது உங்களிடம் ஓடிவந்துவிடும்.

4. தரையில் உருள்வது, தலையை முட்டிக்கொள்வது என எதற்கும் மசியாதீர்கள். வலி வந்தால், அழுகையும் அடமும் தானாக நிற்கும். அவர்களின் அழுகைக்கு கரைந்தோ, அடத்துக்கு வளைந்தோ... கேட்டதை நிறைவேற்றினால், 'ஓஹோ... அப்போ அடம் பிடிச்சா காரியம் நடக்கும்!' என்றுதான் குழந்தை புரிந்துகொள்ளும்.

5. வீட்டுப்பாடம் செய்வதில் தொடர்ந்து அடம் செய்யும் குழந்தைகள் ஏராளம். இதில் அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. படிப்பின் மீது கசப்பு, பிடிக்காத ஆசிரியை, அடிக்கும் அம்மா என்று காரணத்தை ஆராயுங்கள். அவர்களுடன் அமர்ந்து, கதைகளாகவோ, சித்திரங்களாகவோ பாடங்களை எளிமையாக்கிக் கற்றுக்கொடுங்கள்.

6. அடம்பிடிக்கிறார்களே என்று பாக்கெட்டில் அடைத்த உணவுகள், துரித உணவுகளை வாங்கித் தருவது... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நோயாளியாக்குவதற்குச் சமம். பழக்கமாகிவிட்டால்... உடனே நிறுத்தவும் முடியாது. பழங்கள், பழச்சாறு, பால் பாயசம் போன்ற சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக் கொடுங்கள். இவற்றின் ருசியை உணர வைத்து, துரித உணவுகளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரியுங்கள்.

7. 'எப்பப் பார்த்தாலும் டி.வி பார்க்குறான்' என்பது முக்கியமான குற்றச்சாட்டு. புத்தகங்கள் வாசிக்க, கலைப்பொருட்கள் செய்ய, உங்களுடன் விளையாட என்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்கக் கற்றுக்கொடுங்கள். அதன்பிறகு, 'குறிப்பிட்ட நேரம் மட்டுமே டி.வி' என்கிற பழக்கத்துக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள்.

8. தினமும் காலை தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்ப படுத்தும் குழந்தைகளை, சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ தாமதமாகவே பள்ளிக்கு அனுப்பி, அதற்காக ஆசிரியையிடம் தண்டனை பெற வையுங்கள். பின் தானாக, 'என்னை சீக்கிரம் கிளப்பிவிடுங்கள்' என்று வழிக்கு வருவார்கள். சில வீடுகளில் பெற்றோர் தாமதமாக எழுவதாலேயே பிள்ளைகளும் தாமதமாகக் கிளம்ப நேரிடுகிறது. இதையும் சரிபடுத்தவும்.

9. 'நீ இதை செய்தா, அதன் விளைவு இப்படி பாதகமா இருக்கும்' என்பதை முதலில் வார்த்தைகளில் சொல்லுங்கள். கேட்கவில்லை எனில், அதை அவர்கள் செயல்வடிவில் உணர்ந்து திருந்தும் வகையில், குறிப்பிட்ட சிலவற்றை (அவர்களுக்கு உடல்ரீதியிலோ... மனரீதியிலோ பெரிதாக பாதகம் ஏதும் தராத விஷயங்கள்), ஓரிரு முறை அப்படியே விட்டுவிடுங்கள். ஒரு முறை பட்டால், மனதில் பதிந்து, பின் தானே வழிக்கு வருவார்கள்தானே!

10. வீட்டில் ஏதோ ஒரு விஷயத்துக்கு அடம்பிடிக்கும் குழந்தை உங்கள் சேலையைப் பிடித்து இழுப்பது, பொருட்களைக் குலைத்துப்போடுவது என்றிருந்தால், பி.பி எகிற கத்தாதீர்கள்... அடிக்காதீர்கள். அவர்களின் கோபமும் வெறுப்பும் அதிகமாகவே செய்யும். மாறாக, அவர்களுடன் பேசாமல் இருந்துவிடுங்கள். தாயின் மௌனத் தைவிட குழந்தைக்கு பெரிய தண்டனை இல்லை. 'அம்மா!' என்று சரண்டர் ஆகும்!

11. இது வெயில் நேரம் என்பதால், தண்ணீரிலோ அல்லது நீச்சல் குளத்திலோ விளையாட அதிகம் விரும்புகிற குழந்தையிடம், 'மாட்டேன்' என்று சொல்லாமல், உங்கள் முன்னிலையில் அவர்களை விளையாட விடுங்கள். இதுபோன்ற விஷயங்களில் உங்கள் கண் பார்வையிலேயே அவர்களை அனுமதிக்கும்போது... அவர்களுக்கும் உங்களுடைய அக்கறை புரியவரும்!

12. குழந்தைகளைப் பொறுத்தவரை, கடினமான பேச்சுகளையோ அல்லது திட்டுக்களையோவிட, உங்களின் சைகை, மௌன, உடல் மொழிகளைத்தான் அதிகம் உணர்ந்து உள்வாங்கி கொள்வார்கள். அவர்கள் செய்கிற செயல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை சொல்லில் புரிய வையுங்கள். புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா, பேசாமல் இருங்கள்... அதுவே போதும், அவர்களைத் திருத்த!

மனிதன் தவிர்க்க வேண்டிய

மனிதன் தவிர்க்க வேண்டிய
மனிதன் தவிர்க்க வேண்டிய
பண்புகளாக,
திருக்குறளில்
கூறப்பட்டுள்ளவை:
பொறாமை
பிறர் பொருளை கவர
நினைத்தல்
புறங்கூறுவது
பயன் இல்லாத சொற்களைச்
சொல்லுதல்
தீய செயல்களைச் செய்தல்
ஊண் உண்ணுதல்
திருடுவது
கோபம் கொள்வது
துன்பம் செய்வது
உயிர்களைக் கொல்வது
ஆசை
மறதி
சோம்பேறித்தனம்
துன்பம்
கண்டு கலங்குவது
கள்ளுண்பது
பிறர்
மனைவியை விரும்புவத
இதன் காரணமாகத்தான்
திருக்குறளை,
‘வாழ்வியல் நூல்’
என்று அழைக்கிறோம்.

இயற்கையிடம் நாம் கற்றுகொண்டது


இயற்கையிடம் நாம் கற்றுகொண்டது

 

1. நாம் பறவையிடம் கற்றுகொண்டோம் விமானத்தில் பறக்க. ஆனால் இனறு 1253 பறவை இனங்கள் அழியக்கூடிய இடத்தில் இருகின்றன.

2.புலிகளிடம் நாம் கற்றுகொண்டது போர்புரியும் சமயத்தில் நம் வீரர்கள் அணியும் ஆடை. எதிரிகள் கண்களில் பட்டுவிடாமல் இருக்கக்கூடிய வித்தை. (புலிகள் வேட்டையாடும் பொது அதன் தோல் மரங்களுடன் நிறத்துக்கு ஒத்துபோயவிடும் ஆகையால் மான்கள் புலியை எளிதாக கண்டுகொள்ளமுடியாது) ஆனால் இன்று இந்த உலகத்தில் மிஞ்சி இருக்ககூடிய புலிகள் 7400.

3. நாம் மீன்களிடம் கற்றுகொண்டது நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. ஆனால் இன்று மனிதன் அறிந்த 3000 மீன் இனங்கள் அழிந்துவிட்டன.

4. நாம் பூச்சிகளிடம் கற்றுகொண்டது இரவில் எளிதாக பார்க்ககூடிய கண்கன்னாடிகள். ஆனால் இன்று மனிதன் அறிந்த 600 பூச்சி இனங்கள் அழிந்து விட்டன.

கடவுள் கொடுத்த வரம் இயற்கை. நாம் இந்த இயற்கையில் கற்றுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால் அவைகளை மறைமுகமாக கொன்று குவிக்க மனிதனுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.

வேடிக்கை

வேடிக்கை


வெடித்துச் சிதறுவது
வேடிக்கை ஆகிவிட்டது
தீபாவளியில் மட்டுமல்ல
தினசரி வாழ்க்கையிலும்