8.07.2012

தேசியத் தலைவர் சிந்தனைகள்.....


2009 ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள்

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் 2009 ஆம் ஆண்டில் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நிகழ்வுகளைக் குறிக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பதினேழு பேர் இறந்துள்ளார்கள்.

பொருளடக்கம்

    • 1.1 முத்துக்குமார்
    • 1.2 பள்ளப்பட்டி ரவி
    • 1.3 சீர்காழி இரவிச்சந்திரன்
    • 1.4 அமரேசன்
    • 1.5 ஜோதி என்கிற தமிழ்வேந்தன்
    • 1.6 சிவப்பிரகாசம்
    • 1.7 கோகுலகிருஷ்ணன்
    • 1.8 சீனிவாசன்
    • 1.9 சதாசிவம் சிறீதர்
    • 1.10 நாகலிங்கம் ஆனந்த்
    • 1.11 இராசசேகர்
    • 1.12 பாலசுந்தரம்
    • 1.13 மாரிமுத்து
    • 1.14 சிவானந்தன்
    • 1.15 சுப்பிரமணி
    • 1.16 கிருஷ்ணமூர்த்தி
  • 2 மலேசியா
    • 2.1 ராஜா
  • 3 சுவிட்சர்லாந்து
    • 3.1 முருகதாசன

முத்துக்குமார்


முத்துக்குமார், சென்னை, சனவரி 29, 2009
தமிழ்நாட்டில் முதன் முறையாக 2009, சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்.
பார்க்க: விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

பள்ளப்பட்டி ரவி


ரவி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், பிப்ரவரி 2, 2009
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் சனவரி 31 2009 சனிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செய்தி அறிந்த தலைவர்கள் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்தனர். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னரும் பலனின்றி பிப்ரவரி 2, 2009 அன்று மரணமடைந்தார். தனது கணவர் தீக்குளித்ததைப் பற்றி ரவியின் மனைவி சித்ரா கூறுகையில் 'எனது கணவர் இலங்கைத் தமிழர்களின் அவலங்களை பத்திரிகை, வானொலி மூலமாக அறிந்து சதா கவலையுடன் இருந்தார் எனவும், முத்துக்குமார் தீக்குளித்ததை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார் என்றும், அவர் இதனால் மனமுடைந்தே தனது உடலில் எண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார். ரவி தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயரிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

சீர்காழி இரவிச்சந்திரன்


இரவிச்சந்திரன், சீர்காழி, பெப்ரவரி 7, 2009
சீர்காழி காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலர் இரவிச்சந்திரன் என்பவர் 2009, பெப்ரவரி 7 அன்று அதிகாலை 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க..... தமிழீழம் வெல்க...... ராஜபக்சே ஒழிக..... காங்கிரஸ் ஒழிக........ எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார். அன்று மாலை 4 மணியளவில் அவர் மருத்துவமனையில் இறந்தார்

அமரேசன்


அமரேசன், சென்னை, பெப்ரவரி 8, 2009
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவர் 2009, பெப்ரவரி 8 அன்று சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார். அமரேசன், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்தாக கூறப்படுகிறது. இவரின் இறுதி நிகழ்வுகள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் நடத்தப்பட்டது. அமரேசனின் உடலம் மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது

ஜோதி என்கிற தமிழ்வேந்தன்


ஜோதி, கடலூர், பெப்ரவரி 18, 2009
கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் 2009, பெப்ரவரி 18அன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் கோர்ட் அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார்.கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். உயிருக்கு போராடி வரும் நிலையில் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தமிழ் வேந்தன், “ ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் என்று கூறினார். தமிழ்வேந்தனின் சிகிச்சை பலனின்றி இந்திய நேரம் இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் மரணமானார்.தமிழ்வேந்தனுக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது.

சிவப்பிரகாசம்


சிவபிரகாசம், சென்னை, பெப்ரவரி 21, 2009
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி திமுக இளைஞர் அணி சார்பில் பெப்ரவரி 21, 2009 மாலை, சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்த தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லீட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்து என்று கத்திக் கொண்டே உடலில் தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவற்துறையினர்ர் அவரைக் காப்பாற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் பெப்ரவரி 22 இல் உயிரிழந்தார். தீக்குளித்த சிவப்பிரகாசம் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்திருக்கிறார். முதல் அமைச்சர் மு. கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தலைவர் அவர்களுக்கு, இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுடைய உயிரை காக்க வேண்டும்" என்று எழுதியிருக்கிறார்

கோகுலகிருஷ்ணன்


கோகுலகிருஷ்ணன், விருதுநகர், பெப்ரவரி 25, 2009
சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(வயது 55), பெப்ரவரி 25, 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் கேன், கடிதம் சகிதம் கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார்.இலங்கையைச் சேர்ந்தவரான கோகுலரத்தினம் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு எதிலியாக வந்து, பின்னர், இந்தியக் குடியுரிமை பெற்று அரசு சார்பில் சிவகாசி அடுத்த ஆனையூர் காந்திநகரில் உள்ள 'சிலோன்' குடியிருப்பில் வாழ்ந்து வந்தார்.இவருடைய உடலின் அருகே சுருட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைப் பிரித்துப் பார்த்தபோது அதில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அதில், தமிழக முதல்வர் கலைஞர் விரைவில் குணமடைய வேண்டும். இலங்கையில் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடி வரும் இராமதாஸ், திருமாவளவன், வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்யக்கூடாது என எழுதப்பட்டிருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

சீனிவாசன்


சீனிவாசன், வாணியம்பாடி, மார்ச் 1, 2009
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான கூலித் தொழிலாளி சீனிவாசன் இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி பெப்ரவரி 26, 2009 இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மார்ச் 2, 2009 அன்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

சதாசிவம் சிறீதர்


சதாசிவம் சிறீதர், சென்னை, மார்ச் 5, 2009
சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (வயது 33), 99 ஆவது வட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் புதன்கிழமை, மார்ச் 4, 2009, தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி சிறீதரன் மருத்துவ சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை, மார்ச் 5, 2009 அன்று உயிரிழந்தார். இவரது மனைவியின் பெயர் லக்ஸ்மி ,இவருக்கு ஈழச்செல்வன், தமிழ்ச்செல்வன் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நாகலிங்கம் ஆனந்த்


நாகலிங்கம் ஆனந்த், கடலூர், மார்ச் 15, 2009
கடலூர் அருகே உள்ள அன்னவள்ளியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டரான இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 2009, மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனவேதனை அடைந்திருந்தார். இந்நிலையில், திடீரென தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடி "இலங்கைத் தமிழர்கள்!" வாழ்க என்றும், "இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்" என்றும் ஆவேசமாக முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவர் தீயிட்டுக் கொள்வதைத் தடுக்கப் பலர் முயற்சித்த போதிலும், அவர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தீயிட்டுக் கொண்டார். உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதி மக்கள் புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை உயிரிழந்தார்.

இராசசேகர்


இராசசேகர், அரியலூர், மார்ச் 17, 2009
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டுநாகலேரியை சேர்ந்தவர் இராசசேகர் (வயது 24). ஒரு குழந்தையின் தந்தையான இவர் பாமகவைச் சேர்ந்த இவர் ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி, கடந்த சில நாட்களாகவே வேதனைப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராசசேகர் கூறியிருக்கின்றார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். ஆனால், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராஜசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இராஜசேகர் சேர்க்கப்பட்டார்[13]. சிகிச்சை பலனின்றி மார்ச் 17 செவ்வாய் காலை இவர் உயிரிழந்தார்

பாலசுந்தரம்


பாலசுந்தரம், புதுக்கோட்டை, மார்ச் 22, 2009
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்களம் பகவான் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். மார்ச் 22, 2009, மதியம் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்[14]. கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாங்க முடியாத பாலசுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், மார்ச் 22, 2009, மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார். பின்னர் இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

மாரிமுத்து


மாரிமுத்து, சிவகாசி, மார்ச் 22, 2009
விருதுநகர் மாவ‌ட்ட‌ம், சிவகாசி காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 62). காங்கிரஸ் தொண்டரான இவ‌‌ர், மார்ச் 22, 2009 இரவு வீட்டு வாசலில் உள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது திடீரென்று உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இ‌தி‌ல் மா‌ரிமு‌த்து‌‌க்கு பல‌த்த தீ‌க்காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. தகவல் அ‌றி‌ந்து சிவகாசி காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்து வந்து மா‌ரிமு‌த்துவை சிவகாசி அரசு மருத்துவமனையில் சே‌ர்‌த்தன‌ர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து சிகிச்சை பல‌னின்றி உ‌யிரிழ‌ந்த‌ா‌ர். இறப்பதற்கு முன்பு மாரிமுத்து ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதம் கொடிக்கம்பத்தின் அருகே கிடந்தது. காங்கிரஸ், தே.மு.தி.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களை சோனியா காந்தி காப்பாற்ற வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் எழுதி வைத்திருந்தார்

சிவானந்தன்


சிவானந்தன், கரூர்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவானந்தன் (வயது 46) , சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயில் அருகே ஏப்ரல் 17, 2009 இரவு இலங்கையில், இராணுவத்தின் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு தன் மீது மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் சிவானந்தனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவர் பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத் தொண்டராவார்.

சுப்பிரமணி


சுப்பிரமணி, திருப்பூர்
ஈழத்தமிழர்களை காக்கக் கோரி பண்ருட்டியை சேர்ந்த அதிமுக தொண்டரான சுப்பிரமணி (வயது 43). ஏப்ரல்23, 2009 அன்று கொளத்தூர் பாளையம் என்ற இடத்தில் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுகிறேன் என்று தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள், மனைவி உள்ளனர்.இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கி தவிப்பதை பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் பேசி வந்ததுள்ளார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதை பற்றி தனது டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

 கிருஷ்ணமூர்த்தி


கிருஷ்ணமூர்த்தி, சீகம்பட்டி, ஏப்ரல் 18, 2011
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தின் திரு. ராமசுப்பு அவர்களின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார். சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன. தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன் என்றவாறு மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்து வமனை யில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனிடையே கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவரது குடு ம்பத்தாரிடம் கிடைத்தது. அதில், ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை பொறுத்துக் கொள்ள முடியாது தான் தீக்குளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா

 ராஜா


இராஜா, மலேசியா, பெப்ரவரி 7, 2009
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பெப்ரவரி 7 அன்று மலேசியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ராஜா (வயது27) என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய டைரி, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தது. அந்த டைரியில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதி இருந்தார். அதில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம், உடனடி பேச்சு வார்த்தை மூலம் அப்பாவி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ அமெரிக்காவின் புதிய அதிபர் ஓபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், நார்வே சமாதான தூதர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்லவேண்டும். என்றும் எழுதப்பட்டிருந்தன

சுவிட்சர்லாந்து

 முருகதாசன்


முருகதாசன், சுவிட்சர்லாந்து, பெப்ரவரி 12, 2009
சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான துன்னாலை வர்ணகுலசிங்கம் முருகதாசன் என்ற 27 வயது இளைஞர் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு ஈகப்பேரொளி முருகதாசன் தீக்குளித்தார். பார்க்க: முருகதாசன் கடிதம்

தற்கொலை...

     கலியுகக்
    காமுவர்களின்...
    களியாட்டத்திற்கு அஞ்சி,,
    கருவறைக்குள்ளேயே,
    கயிறாய் தொப்புள்கொடியில்...
    கழுத்தை நெறித்துக்கொண்டு,
    கணக்கை முடித்துக்கொண்டது,,
    அப்பெண் சிசு!!!

எழரைப் பிடித்தது !! நாலரை வயதில் !!!

     என்ன  சாதிக்கப் பிறந்தாய்?

      என்று கேட்ட ஆசிரியர்...
      எழுதவேண்டும் பதிவேட்டிலென்று..
      என்ன சாதிக்குப் பிறந்தாய்?
      என்றார்!  அன்று முதலே...
      எழ ஆரம்பித்தன...,
      என் சாதிச்சாக்கடைக் குமிழிகள்!
      எனவேதான் 'ஆரம்பப்பள்ளிகள்'
      எனப் பெயர்சூட்டினர் போலும்!

தமிழ்-பூக்கள்


தமிழ்-பூக்கள்

1. காந்தள் மலர்

2. ஆம்பல் மலர்



3. அனிச்சம் பூ
...
4. குவளை மலர்

5. குறிஞ்சிப் பூ

6. வெட்சிப் பூ

7. செங்கோடுவேரி மலர்

8. தேமாம் பூ

9. மணிச்சிகை(செம்மணிப்பூ)

10. உந்தூழ்(மூங்கில் பூ)

11. கூவிளம் பூ

12. எறுழம்பூ

13. சுள்ளி(மராமரப்பூ)

14. கூவிரம் பூ

15. வடவனம் பூ

16. வாகைப் பூ

17. குடசம்(வெட்பாலை)

18. எருவை(கோரைப்பூ)

19. செருவிளை(வெண்காக்கணம்)

20. கருவிளம் பூ

21. பயினிப் பூ

22. வானிப் பூ

23. குரவம் பூ

24. பசும்பிடி(பச்சிலைப்பூ)

25. வகுளம்(மகிழம்பூ)

26. காயா மலர்

27. ஆவிரைப் பூ

28. வேரல்(சிறுமூங்கில்பூ)

29. சூரல் மலர்

30. சிறுபூளைப் பூ

31. குறுநறுங்கண்ணி மலர்

32. குருகிலை(முருக்கிலை)

33. மருதம் பூ

34. கோங்கம் பூ

35. போங்கம் பூ

36. திலகம் பூ

37. பாதிரி மலர்

38. செருந்தி மலர்

39. அதிரல் பூ

40. சண்பகம் மலர்

41. கரந்தை மலர்

42. குளவி(காட்டு மல்லி)

43. மாம்பூ

44. தில்லைப்பூ

45. பாலைப்பூ

46. முல்லைப்பூ

47. கஞ்சங்குல்லை

48. பிடவம் பூ

49. செங்கருங்காலி மலர்

50. வாழைப் பூ

51. வள்ளிப் பூ

52. நெய்தல் மலர்

53. தாழைப் பூ

54. தளவம்(செம்முல்லைப் பூ)

55. தாமரை மலர்

56. ஞாழல் மலர்

57. மௌவல் பூ

58. கொகுடிப் பூ

59. சேடல்(பவளமல்லி பூ)

60. செம்மல்(சாதிப் பூ)

61. சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ)

62. கோடல்(வெண்காந்தள் மலர்)

63. கைதை(தாழம் பூ)

64. வழைப் பூ(சுரபுன்னை)

65. காஞ்சிப் பூ

66. கருங்குவளைப் பூ(மணிக்குலை)

67. பாங்கர் பூ

68. மரவம் பூ

69. தணக்கம் பூ

70. ஈங்கைப் பூ

71. இலவம் பூ

72. கொன்றைப் பூ

73. அடுப்பம் பூ

74. ஆத்திப் பூ

75. அவரைப் பூ

76. பகன்றைப் பூ

77. பலாசம் பூ

78. பிண்டி(அசோகம்பூ)

79. வஞ்சிப் பூ

80. பித்திகம்(பிச்சிப் பூ)

81. சிந்துவாரம்(கருநொச்சிப்பூ)

82. தும்பைப் பூ

83. துழாய்ப் பூ

84. தோன்றிப் பூ

85. நந்திப் பூ

86. நறவம்(நறைக் கொடிப்பூ)

87. புன்னாகம் பூ

88. பாரம்(பருத்திப்பூ)

89. பீரம்(பீர்கம்பூ)

90. குருக்கத்திப் பூ

91. ஆரம்(சந்தனப்பூ)

92. காழ்வைப் பூ

93. புன்னைப் பூ

94. நரந்தம்(நாரத்தம்பூ)

95. நாகப்பூ

96. நள்ளிருநாறி (இருள்வாசிப்பூ)

97. குருந்தம் பூ

98. வேங்கைப் பூ

99. புழகுப் பூ

வெட்டரிவா மீசை வைத்து
 நெஞ்சு நிறைய வீரம் தைத்து
 கண்ணில் நல்ல கனிவு கொண்டு
 வாழ்ந்த எங்கள் மாவீரன் வீரப்பா
உனை தமிழகம் வஞ்சித்தது
ஏனப்பா நல்லவனுக்கு நல்லவன் நீ
நயவஞ்சகனுக்கு துரோகி நீ
ஏழைகளின் நண்பன் நீ
பணக்காரனுக்கு தீவிரவாதி நீ
 மலைவாழ் மாந்தரின் கடவுள் நீ
வன விலங்குகளின் பாதுகாவலன் நீ
 சந்தன மரங்களின் சூலாயுதன் நீ
ஆயுதமேந்திய போராளி நீ

 பாசமுள்ள தந்தையும் நீ
 காதலுள்ள காதலன் நீ
 வீரமுள்ள மறவன் நீ
 மானமுள்ள தமிழன் நீ
முப்பத்திநான்கு வருட சரித்திரம் நீ
 காலத்தால் அழியாத காவியம் நீ. . .

தமிழா! நீ இன்னுமா உறங்குகின்றாய்!

நாவாய் படை நடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள் தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது
தமிழா! நீ இன்னுமா உறங்குகின்றாய்!
ஆடையை உலகிற்கு
அறிமுகம் செய்தவனை
ஆடை அவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுகொல்கிறான்
தமிழா! நீ இன்னுமா உறங்குகின்றாய்!

குப்பைத்தொட்டியில் குழந்தை

http://adf.ly/Ol7Bv
காதல் என்ற போதையிலே.
பாதை தவறி போனவரே.

காதலன் என நம்பி
காமுகனிடம் சிக்கியவரே.

கொண்டவன் கை கழுவ
கலங்கி இதயம் வெடித்தவரே.

கற்பு என்பது சொல் அல்ல
காலத்திற்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள

தெரிந்தே நீங்கள் செய்யும் தவறுக்கு.
தண்டனை பச்சிளம் குழந்தைக்கு.

தொப்புள் கொடி அறுத்த உடனே
சேயுடனான பந்தத்தையும் அறுத்தீரோ.

எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.

உன்னை விட உயர்ந்ததடி
உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..

கை விட்டு போகும்  
முன் அதன் கண்ணழகை பாரடி. . . .

நம்பிக்கை

தோல்விகள் புதிதல்ல
வெற்றிகள் குவியல
உறவுகள் ஒன்னுமில்ல 
உறங்கவும்  தெரியல
கனுவுகள் குறையல
கவிதைக்கு பஞ்சம்மில்ல
சாப்பாடுக்கு வழியல்ல 

சங்கடத்துக்கு முடிவில்ல
வறுமையும் தொலையல
வருத்தமும் நெஞ்சுக்குள்ள- இருந்தாலும்
வாழ்கையும் கசக்கல
நம்பிக்கையும் போகல....

ரத்த தானம்


ரத்த தானம்





நமக்கு இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான்.
ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
சரி ரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது. அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களிடம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் ரத்த தானத்தை அளிக்க முன் வர வேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் ரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும்.


சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முத‌ல் 350 ‌மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
தானமாக அளித்த ரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
0 ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
0 ரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
0 ரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும்.
0 ரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது.
0 ரத்த தானம் செய்ய விரும்புவர்களுக்கு சர்க்கரை நோய், டிபி, எய்ட்ஸ் போன்று ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
0 ரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.

யாரெல்லாம் ரத்த தானம் அளிக்க கூடாது...


0 கர்பமாக இருப்பவர்கள் அல்லது சமீபத்தில் கருக்கலைப்பு ஆனவர்கள்.
0 தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.
0 போதைப் பொருள் பழக்கம் அல்லது பலரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள்.
0 வரும் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்.
0 பெண்கள் தங்களது மாதவிலக்கு நேரத்தில் ரத்த தானம் செய்ய இயலாது.
0 இதய நோய், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், நுரையீரல் பழுதடைந்தவர்கள், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் அளிக்க இயலாது.

ரத்த தானத்தினால் பாதிப்பு உண்டா?


ரத்த தானம் அளிப்பதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால் நமது உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும். அது உடலுக்கு நன்மையாகத்தான் அமையும்.
ஆனால், ரத்த தானம் அளிக்கும்போது நம்மிடம் இருந்து ரத்தம் எடுக்கப் பயன்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் புதிதாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மட்டும் நாம் சோதித்துக் கொள்ள வேண்டும்.


தகவல் தொடர்புக்கு : 
http://www.friends2support.org

வேடிக்கை


வெடித்துச் சிதறுவது
வேடிக்கை ஆகிவிட்டது
தீபாவளியில் மட்டுமல்ல
தினசரி வாழ்க்கையிலும்

ஒரு தலைவன் இல்லை...

என் கை எட்டும் தூரத்தில்
 என் இனம் கதறிக்
கொண்டு இருக்கிறது
அவர்களின் கண்ணீர் துடைக்க
 எங்கள் இனந்தில் நாதிகள் இல்லை
  என் இனத்தின் கண்ணீர் தொடைக்க
 ஒரு தலைவன் இல்லை
எங்கள் தலைவர்களுக்கோ
பதவி முக்கியம் அதற்கு
 அந்த கண்ணீர் முக்கியம்
 எங்கோ கேட்ட ஞாபகம்

 "குஜராத்"பூகம்ப நிவாரணநிதி
திரட்டுவதில் தமிழன் தான் முதலிடம்
 "கார்கில்" நிதி  திரட்டுவதில்
தமிழன் தான் முதலிடம்

ஆனால்
அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லை. . .

அம்மா

புரண்டு
படுத்தால்
நாம் இறந்துவிடுவோமோ
என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த
சூரியன்


 ***********அம்மா************