உச்சிதனை முகர்ந்தால் பாடல் வரிகள்
“இருப்பாய் தமிழா நெருப்பாய் … நீ!
இழிவாய் கிடக்க செருப்பா… நீ!
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிறதே…
துடித்து துடித்து உடல் சிதைகிறதே…
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே…
எம் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள் – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்? – (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
எரிமலை தணியுமா… தண்ணீரில்
கடல் அலை கரையுமா… கண்ணீரில்
முழங்கிடும் சங்கே முழங்காயோ
விலங்குகள் உடைக்க பிறந்தாயோ
அடிமையாய் வாழும் நிலம் ஒன்று
விடியலைக் காணும் களம் இன்று
வெட்டவெளியோ வீடானது…
பட்டினியோ உணவானது…
போராடு நீ வீரோடு!
மின்னலின் தொடர்ச்சியே… இடியாகும்
இன்னலின் தொடர்ச்சியே… விடிவாகும்
கொந்தளித்து அறம் வெடிக்காதோ
கொடியவர் மூச்சை முடிக்காதோ
ஆயிரம் அலைகளை தோளாக்கு
அடிமைக்கு விடுதலை நாடாக்கு (தணிக்கையில் நீக்கப்பட்ட வரி)
மாந்தர் உயிரோ நிலையற்றது…
மானம்தானடா நிகரற்றது…
போராடு நீ வீரோடு!
படம் - உச்சிதனை முகர்ந்தால்
பாடலாரிரியர் - காசி ஆனந்தன்