7.19.2012

உலகம் அழியப் போகிறதா?

இதற்கு ஆதாரமாக ஊடகங்கள் குறிப்பிடுவது் மாயா இனத்தவரின் காலண்டரைத் தான்.
உலகம் அழியப் போகிறதா?

அது எப்போது?

 எப்படி என்பதில் நமக்கு அக்கறையில்லை. ஏனெனில் சர்வ வல்லமை  படைத்த இறைவன் ,  இவ்வுலகை பற்றி அவன் ஒருவனே அறிந்த ரகசியம் அது. நாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

யார் இந்த மாயா இன சமூகம்?

 அவர்களுக்கும் உலக அழிவுக்கும் என்ன சம்பந்தம்?

 இது தான் நம் முன் நிற்கும் கேள்வி.

மாயா இன மக்களைப் பற்றிய வியப்பூட்டும் சில அதிச்சியளிக்கும் தகவல்களை நண்பர் ராஜ்சிவா என்பவர் எழுதி்யுள்ள கட்டுரையை இங்கு தொடர்களாக உங்களுக்குத் தருகிறேன். இதில் அவரிடம் இருந்து எடுத்து உங்களுக்குப்  பரிமாறும் வேலை மட்டுமே என்னுடையது. இவ்விசயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா என்று கேட்காதீர்கள். இந்த விவாதத்திற்குள் நான் வர மாட்டேன். இக் கட்டுரையில் உள்ள அதிர்ச்சியளிக்கும் வியப்பூட்டும் சில தகவல்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை இங்குப் பதிவு செய்கிறேன்.


2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் -1

சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும்இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும்வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்,எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள்இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்?அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்றநினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
ராஜ்சிவா

 இதோ 2012ம் ஆண்டு பிறந்து விட்டது.. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது'2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும்முக்கியத்துவம்தான்.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9c1ynz20Q82IsNiU_hLCyDbPH-5aPixh_AIEbOn3guiIO1Zr88-HNgB8iOWe8wBeRbElfLHfml7V7zB-ocIt-9xs-HRhA_WIdxNR7Iw9CuFw0mGX6qO9eJj-iA6B2coCo5X2-xEdPl3s/s320/01ruins.jpg>

"சரியாக 2012 வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும்இருக்கிறது.

இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும்வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்,எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.

மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள்இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்?அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்றநினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiGDv99iyH4kAQdgXXvpeovXAQAwwWyEwxdgSq06FT76lbob2xRqq3HBqz2au52C111mBY4z7pyVi7V9ixuHAheJA_z35n7Vn1mx8BOh-KIlE8Rn9qVsdUUBhVnGcXXG0urapsuIDYSjH8/s320/01_02_P-4.jpg>

என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து,அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விடமாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரேஇரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள்மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்றஅனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்தஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlVxJKptG_6_ulvH0q_byC-2Ctvn-TANrf_CZpw8N2FlSJCWh8h3JFOJ1MD0xL6Vnp678pYW2moJT8z0uV82tdlK0MkYAAy6qho7n98IE2qKe7tJwXN9wyOSUYuVbQtkATSm5H1a3HgKo/s320/01_03_maya.jpg>

ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம்வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும்தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குகிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள்பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும்எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவைஅவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர்பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVzyVfbtPYFZhw4fRZcURRJvXY8U4AHReLJiMlvxm2lyg5eGEjfUWiYy9ZpSBAaCYC3msE-X8snuZwVqo8sR6D7vnppCdn_x5uMC7Dp6UzR-EUFgEYXBFBfd6opBRFiu3VmY96o_QaO1U/s1600/01_04_What-Do-the-Mayan-Carvings-Depict-2.jpg>

சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்தசுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்துகொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா!


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghTfbWpMrGsJNbjWsqOFsBUaiIW2e1SniAgGgJ8ErWEXv79ihc3RC9DeTGBqvCY3A_L8u93oqHuYIHnwytfofuL0eG9gzIblC7o5oPnTNO0JRBtZ-78Z0SPiKB4LpO2MvPZy9KTZrW7jA/s320/Photo+1.jpg>

முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றி, உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம், எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம். இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள். பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராத, அறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும். உண்மைதான். நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான். எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டு, இதை வாசியுங்கள்.

கடந்த தொடரில், சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி. மாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.

சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?

அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன். இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.

இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்' என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.

அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.

ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?

ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.

அந்தப் படம் இதுதான்........!
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKeUw-Hdq1Vkui0V55QZAzynspx6NCt0KyCbj1W8wR27U-Vp68ASHh9tZOy5tFSWUYKflnl2OEA6z_ACLlfkq9tV-JLDUbWst7n54lHvZlvIYSIkID1DmMcRH1_2mu1m1I1mfLUkeTDxQ/s320/Photo+2.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi62Sdt-xPpCxIyq_pCAlstz16uktVhWw9Bnwh2s0Y57IpT-8u6KSY8kkoxjWzTHk5rRHBH_oKYMLY99BGLNJF4sUryICgwNhMflnjSXYqa05Sx1nqXYlZfk2bD23APn7wAyGIJ2Su8hec/s320/Photo+3.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHV6zWCdCzT_5UBzYzHHc9nKP6ZU_REnewyEtvxN2dPUlXpXujzgpzBe5flqERSlTuxJLy7s0R7-__Q3vWzxqaMU5v_QnBup3o5Ht8bQSriRxnezF1Y99_GzxVGEx0Pp8O9M35P6QqhVw/s320/Photo+4.jpg>


"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல" என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?

ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.

சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.

அவை என்ன தெரியுமா……..?

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.

அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.

என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWmPv5kH1hZYAY4fmGkiby35ZH-zuszaoqSgbvlG3IxpkaVJ1q30WjkTdOrEqNJY9T-2uYbpzpVjr9454nf0i__4Qc-N2EWD6PNE_VKb_HKEVIRYY0AsQpRXG4Gv-Y4fYfjXlH2EDWkPw/s320/Photo+5.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHbC0Hdbu1VPNq8AiaKc3SyTFOTGiRQVprldmLcVe2F99DYKEzebZyg_I4kHSylgQXTmat7fuNpJA9NG4ZX6Ony9aPveACuIKjd8Kkqnrx8_OtmH7-GZtU0U227o8PSEyvBitZ3gggzpg/s320/Photo+6.jpg>



ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…?

நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும், அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. அது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.

மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

சரி, இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.

அப்படி என்னதான் கிடைத்தன..?

அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaGIt6fUC9ayZJgA41oUsWTf9_0Fpl1xnEqLiBpUrKTSFd-XzEUyeaxS0s2FrIcFrWly-Lo_ylg32kDcnlEbpjuMP59TrwwAs8zEGeSmpdHhjiKnjeK5iCEHPr173bswTgcc3wtDhPbDE/s1600/Photo+1.jpg>

"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.


அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு  கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது  (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUcgZTIe_r1rxe27MiOXRloXZU_Y8yXT7kAwQjcdrSf4IMCEDeY2QeD4qA-IZPl0ydpGHQjRdkxzI1Ht_rFuTx-2w6e8KEc9gjEjzDcQqmwIA-JT4El-J7ez3KDIzvQwwLw2IceryISTU/s320/Photo+2.jpg>



அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_y5vFQpegz8WYSo5oTdx76dRyuteXU5or41EcwM-XRa6EW5Z__B3Jjpl1rN-mCt5Lnp3hnMn8mmrZYQMN_mw1xNQntKYPSrC7-Qs0y0E6tNoi_fd29wKRR31WrslH9muJQ6HRDpSFsgo/s320/Photo+3.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnalKauRc9vAZ8XP2cNqSaGsOYTlPVtx3essq0yZqBcFXF5uRNxpQRhiCvAXuYUJa_dXSCYcSQt3lcn0iJ5nBiMtVoP1aEm2PQ03cgAE3NKG-fz3kQ7kjFwho-4uiTeDom4bc_J5DsxJ8/s320/Photo+4.jpg>


"அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcywwAY-hU9labD07k6dBf6JK8Aur9LfcK4lrVvnFYO7L8_vuE0_ADQDYIALDBRr8CacN-AkWzBoTHmlqgc4720CGo1U_YcH_aWwxkQZGz7m9sXQDPM9yUkgZpaSfsp9RiDvTGLViguew/s320/Photo+5.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG5RGoiw2wFty9afsi0ZyIWA5k8eYvq7fe8aJVCwqej2j_T96Z3dLU4jqa3t_dr7Bj-kdtC3ehajaednplZ_ugFo-NnTbyRKKAMApws2r7VsNV8FS02Jn2drZI715rGJL8Y6UY6L5KN4g/s320/Photo+6.jpg>

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4NepQ-Rd61Ezy-jMEN6tb1z8F8Wb6222O_nyZg1KZ-pmCOEUzGqNmQR3irz7RcfutPt6RPROVT22ZIaxYfxkeyCbCABXIcGBLVTgLx-DZOdBT0Yzfr7k0MsJ5N9gvLnr_zMvB4I47QWo/s320/Photo+7.jpg>





இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்.
'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTxwZ7YDKP6ZV_jHR8FnsZGyFDN6-7F2xL3TA970zvwgcn80WF0HKq6KtsWp8w9OVs3oDhqi9YqSyxdNs8aRoDH93_yeDRIntuHDaCg7EgJeNGvvaOC14eLt5xXF4KkXrFN3FlZikj5_M/s1600/Photo+8.jpg>




இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.
<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkoxd7GtOE2SOIL8PYb6giHi1Apmvf1Yx5_ezwOoEJWAAbhS4WS43g0u3ba0B_Yy8umKLiPSvtpWc7AupQ8LeC4W6jlL0Yty9fZSzXFQumqARUrOmNkn_p9plh-aXdwfloish4RxX_Gm8/s320/Photo+9.jpg>




இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும்.  இப்போது இந்தப் படங்களையும்  பாருங்கள்.
இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.


<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhETkwXlYpKJ43WlCCbdAon7fYS3VYMjHMfDc71YpzidhqlxGzjcWIrDIqTYWFisuGPWswIZK1aQJdw1u-ZVaSVR1B7kVoqmUQ2dpCAOilmbG55c5KWuYoGQUjJy20XkKNXoYkw5f1zJ6o/s320/Photo+10.jpg>


இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!

<https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEH62ELkn1KIc1E9dqlW_kxieVWOVCtdMHb35l9cwC6OiB3uiSc5khOgOFp-QILOYUkJOsUrbdnFGraxJi5_hPrTWJyR6xASw76V0O5pAI1uahPGdhx6MLOSeILBiQm4Oa0BGBcpj6d4s/s320/Photo+11.jpg>

செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!

மூவர் உயிர் காக்க தீக்குளித்த ஈகி செங்கொடியின் வாழ்க்கை ஆவணப்படமாகிறது!



பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான் காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாறு “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற பெயரில் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ந்து “பொன்னுசாமி” என்ற பெயரில் எழுதி வரும் வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். இவர், இயக்குநர் “பாலை“ ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். உணர்வாளர்கள் நடத்தும் ஏஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான முதல் ஆவணப்படமாக இப்படம் தடம் பதிக்கும் என படத்தின் இயக்குநர் வெற்றவேல் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து படக்குழுவினர் சார்பில் இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படுத்தை ஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

இருளர் பழங்குடியினர், காடும் காடு சார்ந்த இடங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள். பாம்பு, எலி பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இருளர்களையும், இவர்களின் மரபு அறிவையும் தவிர்த்து விட்டு, பாம்பு பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வது அரிது.


ஆண் - பெண் சமத்துவம் இவர்களின் அடையாளங்களில் ஒன்று. வீடுகளில் ஆண்கள் சமைப்பது இவர்களிடம் சர்வசாதாரணம். இருளர்களின் இசை தனித்துவம் வாய்ந்தது. இருளர்கள் கலை உணர்வில் சிறந்து விளங்குபவர்கள். ஆடல், பாடல்களில் தனித்துவம் பெற்றவர்கள். இசைக்கருவிகள் இல்லாத இருளர் வீடுகளே இல்லை.


காடுகள் அழிக்கப்பட்டதால் சமவெளிப்பகுதிக்குக் குடிபெயர்ந்து பாரம்பரிய தொழிலை கைவிட்டு கொத்தடிமைகளாக கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியினரான இருளர்களில் ஒருவர்தான் சரசு என்கிற செங்கொடி.


2011 ஆகஸ்ட் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்டவர், செங்கொடி. பழங்குடியினர் தற்கொலை என்பதை அறியாதவர்கள். இருளர்கள் உள்பட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்த செங்கொடி சிறை சென்ற களப் போராளி. இசை, நாட்டியம், பாடல் என பன்முக திறமை கொண்டவர்.


மூன்றாம் வகுப்பை வரையே பள்ளிப் படிப்பை முடித்துள்ள செங்கொடி, லெனின், சேகுவாரா, பெரியார் உள்பட உலகத் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்று நூல்களை படித்து அதன் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.


21 வயதான செங்கொடியின் தற்கொலைக்குப் பின்னால் இருப்பது கோழைத்தனம் அல்ல. அநீதிக்கு எதிராய் கொண்ட பெருங்கோபமும், மூன்று நிரபராதிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற லட்சியமும் செங்கொடியின் முடிவுக்குப் பின்னால் இருந்தன.


யாரிந்த செங்கொடி? தனிமனிதராய் அநீதிக்கு எதிராய் பொங்கியெழுந்த செங்கொடியின் குடும்ப சூழல், அரசியல் பின்னணி என்ன? இவரது இந்த முடிவு உண்மையில் சாதித்ததுதான் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடிய என்னுடைய பயணமே, “இப்படிக்கு தோழர் செங்கொடி..” என்கிற ஆவணப்படம்.


இருளர் சமூகம் இன்னும் இருட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தறுவாயில் அவர்களின் பிரதிநிதியாக இருந்த செங்கொடியின் உடலில் பற்றிய நெருப்பு ஜூவாலையில் வெளிப்படும் இந்திய-தமிழக அரசுகளின் கோரமுகம் அப்பட்டமாக அம்பலமாயிருக்கிறது. இந்தப் படம் செங்கொடி ஊடாக அரச பயங்கரவாதத்தை அலசுகிறது. இவை எல்லாவற்றையும் விட இனிமேல் யாரும் இது போன்ற தற்கொலை முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது என்பதையும் இந்த ஆவணப்படம் மூலம் வலியுறுத்தியிருக்கிறேன்.


செங்கொடி வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் மீட்டுருவாக்கம் செய்யும் சித்தரிப்புக் காட்சிகள் அடங்கிய பிரமாண்டமான இந்த ஆவணப்படத்தை ஏஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நியாஸ் முகமது ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணியை சிறப்புற செய்திருக்கிறார். படத்திற்கான பாடலை கவிஞர் கவிபாஸ்கர் எழுதுகிறார். படத்தின் விளம்பரங்களை பென்சில் டான்ஸ் ஸ்டுடியோஸ் சந்தோஷ் சிறப்புற வடிவமைத்திருக்கிறார். நண்பா டாக்கீஸ் நிறுவனத்தார் பட வெளியீட்டுக்கானப் பணிகளை ஒருங்கிணைக்கின்றனர்.


மரண தண்டனைக்கு எதிராக உருவாகும் முதல் தமிழ் ஆவணப்படும் இது என்ற பெருமையுடன் படத்தின் வேலைகளை நாங்கள் மனநிறைவுடன் செய்து வருகின்றோம். வருகிற ஆகஸ்ட் முதல் வாரம் இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்கான முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.